கட்சிப் பணியில் தீவிரம் காட்டும் அன்புமணி.. 15-ம் தேதி முதல் பொதுக்குழு கூட்டம்

பா.ம.கவில் ராமதாஸ்-அன்புமணி இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. எனினும் பாமகவில் உள்ள பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். இதனிடையே 10 மாவட்டங்களில் பாமக பொதுக்குழு கூட்டம் நடத்துவது பற்றிய அறிவிப்பை அன்புமணி வெளியிட்டுள்ளார்.

பா.ம.கவில் ராமதாஸ்-அன்புமணி இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. எனினும் பாமகவில் உள்ள பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். இதனிடையே 10 மாவட்டங்களில் பாமக பொதுக்குழு கூட்டம் நடத்துவது பற்றிய அறிவிப்பை அன்புமணி வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
anbumani ramadoss

பா.ம.க. பொதுக்குழு - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

பா.ம.கவில் ராமதாஸ்-அன்புமணி இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. எனினும் பாமகவில் உள்ள பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என ராமதாஸ் கூறியுள்ளார். இதனிடையே 10 மாவட்டங்களில் பா.ம.க. பொதுக்குழு கூட்டங்கள் நடத்துவது பற்றிய அறிவிப்பை அன்புமணி வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தரப்பு பா.ம.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

Advertisment

பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சி வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த வருவாய் மாவட்ட அளவில் பொதுக்குழு கூட்டங்களை நடத்துவதற்கு கட்சியின் தலைமை முடிவு செய்திருக்கிறது. முதற்கட்டமாக 10 வருவாய் மாவட்டங்களில் பொதுக்குழு கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன என கூறப்பட்டுள்ளது.

1. 15.06.2025 ஞாயிறு காலை 10 மணி - திருவள்ளூர் மாவட்டம்

2. 15.06.2025 ஞாயிறு மாலை 3 மணி - செங்கல்பட்டு மாவட்டம்

Advertisment
Advertisements

3. 16.06.2025 திங்கள் காலை 10 மணி - காஞ்சிபுரம் மாவட்டம்

4. 16.06.2025 திங்கள் மாலை 3 மணி -ராணிப்பேட்டை மாவட்டம்

5. 17.06.2025 செவ்வாய் காலை 10 மணி - வேலூர் மாவட்டம்

6. 17.06.2025 செவ்வாய் மாலை 3 மணி -திருப்பத்தூர் மாவட்டம்

7. 18.06.2025 புதன் காலை 10 மணி - திருவண்ணாமலை மாவட்டம்

8. 18.06.2025 புதன் மாலை 3 மணி - கள்ளக்குறிச்சி மாவட்டம்

9. 19.06.2025 வியாழன் காலை 10 மணி -சேலம் மாவட்டம்

10. 19.06.2025 வியாழன் மாலை 3 மணி -தருமபுரி மாவட்டம்

மேற்கண்ட அனைத்து மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்கள். சம்பந்தப்பட்ட வருவாய் மாவட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர், மாவட்டச் செயலாளர், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் இக்கூட்டங்களில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மீதமுள்ள மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டங்களுக்கான தேதிகள் வெகுவிரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: