என்னை யாரும் பின்னாலிருந்து இயக்க முடியாது. எல்லாவற்றுக்கும் தீர்வு உண்டு என இன்றைய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (ஜூன் 1) தைலாபுரம் தோட்டத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய ராமதாஸ், அவ்வப்போது பத்திரிகையாளர் சந்திப்பு நடந்து கொண்டிருக்கிறது. வருகின்ற வியாழக்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பில் விலாவாரியாக பேசலாம்.
என்னை யாரும் பின்னாலிருந்து இயக்க முடியாது. வருகின்ற ஆகஸ்ட் 10 ஆம் தேதி பூம்புகாரில் மகளிர் திருவிழா மாநாடு நடக்கிறது. மாநாட்டிற்கு குழு தலைவராக பு.தா அருள்மொழி நியமிக்கப்படுகிறார். இந்த மாநாட்டிற்கு அனைவருக்கும் பத்திரிகைகள் அனுப்பப்படும். அன்புமணிக்கும் அனுப்பப்படும். வருபவர்கள் வரலாம்.
பதவி எப்பொழுது வேண்டுமானாலும் வரும் போகும். அதேபோன்று என்னிடத்தில் இருப்பவர்கள் போவார்கள் வருவார்கள், வருவார்கள் போவார்கள். இது அரசியலில் ஒன்றும் பெரிதல்ல.
அன்புமணி விஷயத்தில் நீங்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு சட்ட விதிகளை ஆராய்ந்து வருகின்ற வியாழக்கிழமை பதில் சொல்கிறேன். என்னை யாரும் இயக்க முடியாது, இயக்கவும் இல்லை. பூம்புகாரில் நடக்கும் மகளிர் மாநாட்டிற்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்படும். நானே தலைவர் என்று அன்புமணி கூறியிருப்பது அவருடைய கருத்து. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி