ராமதாஸ் - அன்புமணி மோதல் எதிரொலி; தைலாபுரத்தில் பேச்சுவார்த்தை: பா.ம.க முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நேற்று (டிச 28) கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில், இன்று சமாதான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நேற்று (டிச 28) கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில், இன்று சமாதான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PMK meeting

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சி தலைவரும், ராமதாஸின் மகனுமான அன்புமணி இடையே சமாதான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

Advertisment

நேற்று (டிச 28) நடைபெற்ற பா.ம.க பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் இடையே கருத்து மோதல் ஏற்பட்ட சம்பவம் அரசியல் களத்தில் பேசுபொருளானது. இதனால், இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஜி.கே. மணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை தைலாபுரம் இல்லத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் வழக்கறிஞர் பாலு, பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முகுந்தனுக்கு பதவி வழங்க மறுபரிசீலனை செய்ய முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, நேற்று இரவு முகுந்தனின் தாயார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் தைலாபுரம் சென்று ராமதாஸை சந்தித்த நிலையில், தற்போது பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

 

Advertisment
Advertisements

 

முகுந்தனுக்கு கட்சியில் பதவி வழங்கியது தொடர்பாக அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மாறுபட்ட கருத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

செய்தி - பாபு ராஜேந்திரன்

Pmk Anbumani Ramadoss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: