Advertisment

என்.எல்.சி போராட்டம்; காவல் துறை வாகனங்களை தாக்கிய பா.ம.க; வானத்தை நோக்கி சுட்ட போலீசார்

என்.எல்.சி.,க்கு எதிரான பா.ம.க போராட்டம்; அன்புமணி கைதால் வெடித்த வன்முறை; கல்வீச்சு காரணமாக தடியடி நடத்திய போலீஸ்; வானத்தை நோக்கி சுட்டதால் பரபரப்பு

author-image
WebDesk
New Update
NLC protest

என்.எல்.சி.,க்கு எதிரான பா.ம.க போராட்டம்; அன்புமணி கைதால் வெடித்த வன்முறை; கல்வீச்சு காரணமாக தடியடி நடத்திய போலீஸ்; வானத்தை நோக்கி சுட்டதால் பரபரப்பு

என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்து பட்டாளி மக்கள் கட்சி நடத்திய முற்றுகை போராட்டம், வன்முறையாக மாறியுள்ளது. போலீசார் தடியடி மற்றும் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி நிலைமையைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

Advertisment

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வருகிறது அனல் மின் உற்பத்தி நிலையமான என்.எல்.சி. இந்த நிறுவனத்தின் சுரங்கப் பணிகளுக்காக அருகில் உள்ள கிராமங்களில் இருந்து நிலம் கையப்படுத்தப்பட்டது. அதற்கான பணிகள் முடிந்து, தற்போது குழாய் அமைக்கும் பணியில் என்.எல்.சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் கையப்படுத்தப்பட்ட நிலத்தில், நிலத்தின் உரிமையாளர்களாக இருந்தவர்கள் தொடர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது என்.எல்.சி நிர்வாகம் விவசாயம் செய்யப்பட்ட நிலங்களில் குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: என்.எல்.சி முற்றுகை போராட்டம் : அன்புமணி ராமதாஸ் கைது: காவல்துறை வாகனத்தின் மீது கல்வீச்சு

இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி, அதன் தலைவர் அன்புமணி தலைமையில் இன்று என்.எல்.சி.,யை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது. என்.எல்.சி பிரதான நுழைவுவாயில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தின் போது பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் உடன் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்துச் செல்ல அறிவுறுத்தினர். ஆனால், அன்புமணி அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டார், காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இதனால் அங்கு பா.ம.க.,வினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், அன்புமணி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க.,வினர் போலீசாரின் வாகனங்களை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கலைத்தனர். இருப்பினும் அன்புமணி ராமதாஸை விடுதலைச் செய்யக் கோரி பா.ம.க.,வினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர். மேலும், போலீசார் மீதும், போலீஸ் வாகனங்கள் மீதும் கல்வீசி வருகின்றனர். கல்வீச்சு சம்பவத்தில் உதவி ஆய்வாளர் ஒருவரின் மண்டை உடைந்தது. மேலும் பல காவலர்கள் காயம் அடைந்தனர். இதனையடுத்து போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி எச்சரிக்கை விடுத்தனர். இருப்பினும் போராட்டம் தொடர்ந்து வருவதால் நெய்வேலியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Anbumani Ramadoss Pmk Nlc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment