மாநிலங்களை ஒழிக்க நினைக்கிறது பாஜக : ஸ்டாலின்

முதலமைச்சராக இருந்தபோது மாநில உரிமை பற்றி பேசிய மோடி, பிரதமரான பின் மாநில உரிமைகளை பறிக்கிறார் என்று முதல்.வர் ஸ்டாலின் பேசி உள்ளார்.

முதலமைச்சராக இருந்தபோது மாநில உரிமை பற்றி பேசிய மோடி, பிரதமரான பின் மாநில உரிமைகளை பறிக்கிறார் என்று முதல்.வர் ஸ்டாலின் பேசி உள்ளார்.

author-image
WebDesk
New Update
tamil news

முதலமைச்சராக இருந்தபோது மாநில உரிமை பற்றி பேசிய மோடி, பிரதமரான பின் மாநில உரிமைகளை பறிக்கிறார் என்று முதல்.வர் ஸ்டாலின் பேசி உள்ளார்.

Advertisment

ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா பாட்காஸ்டில் 3வது ஆடியோ இன்று வெளியானது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பேசியதாவது: ”இந்தியா என்பது கூட்டாட்சி தன்மை கொண்ட நாடு. பல்வேறு அழகிய மலர்கள் நிறைந்த அற்புதமான  பூந்தோட்டம். அதை சிதைக்க பா.ஜ.க முயற்சிக்கிறது.

முதலமைச்சராக மாநில உரிமை பற்றி பேசிய மோடி, பிரதமராகி மாநில உரிமைகளை பறிக்கிறார். மாநில அரசின் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசின் வாசலில் காத்திருக்கும் நிலையை உருவாக்கி விட்டார் மோடி.

தி.மு.க.வின் முக்கிய கொள்கையில் ஒன்று மாநில சுயாட்சி. மாநிலங்களை ஒழிக்க வேண்டும் என பா.ஜ.க  அரசு நினைக்கிறது. மாநில சுயாட்சி கொள்கை  வெல்லும் வகையில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு  வர வேண்டும். இந்தியாவை இந்தியா கூட்டணியிடம் ஒப்படைக்க வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் ” என்று அவர் பேசியுள்ளார்.  

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: