கோவையில் போதை மாத்திரை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், போதை மாத்திரையைக் கரைத்து ஊசி மூலமாக செலுத்தும் அபாயகரமான போதை மாத்திரை விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது.
கோவை தனிப்படை காவல்துறையினர் போதைக்கு பயன்படுத்த்திய மாத்திரைகளை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர் .
கோவை மாவட்ட காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் அவரின் உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்டு போதை வஸ்துகள் குறித்த தீவிர தேர்தல் வேட்டை நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பெரியகடைவீதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உதவி காவல் ஆய்வாளர் கோமதி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
அப்போது வைசால் வீதி அருகே ஒரு பகுதியில் வாலிபர் ஒருவர் போதை பொருள் மாத்திரைகளை வைத்து இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமான வாலிபரை பிடித்திருக்கின்றனர்.
அவரை பிடித்து விசாரித்த பொழுது டெரஸ் ஷெட் அமைக்கும் கூலி தொழிலாளியான நவ்சாத் இந்த போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
உடனடியாக காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் நவ்சாத்திடமிருந்து நைட்ரோஜன் உள்ளிட்ட 46 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்திருக்கின்றனர்.
மேலும், போதைக்காக இந்த மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்துவதாக விசாரணையில் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நவ்சாத் சிறையில் அடைக்கப்பட்டார்.
குறிப்பாக போதை மாத்திரை புழக்கத்தை தடுக்க தனிப்படை போலீசாரின் நடவடிக்கை தீவிர படுத்தப்படும் எனவும் சட்டவிரோதமான செயலில் ஈடுபடும் இது போன்ற நபர்கள் மீது குண்டாஸ் நடவடிக்கை எடுக்க இருப்பதாக காவல்துறை வட்டாரம் தகவல் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் போதைப்பொருள் புழக்கம் அதன் பழக்கம் உடல் நலத்திற்கும் பொது நலத்திற்கும் சமூகத்திற்கும் கேடு என்பதை உணர்ந்து அதற்கு அடிமையானோர் மீட்டெடுக்க வேண்டும் என்பதே பெற்றோர் பலரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றது.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“