திண்டிவனம் பகுதியில் தொடர் ஆடு திருடியவர்களை குறி வைத்து பிடித்த போலீஸ்; எஸ்.பி பாராட்டு

திண்டிவனம் பகுதியில் தொடர் ஆடு திருடியவர்களை குறி வைத்து பிடித்த போலீசாரை பாராட்டி விழுப்புரம் எஸ்.பி சரவணன் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

திண்டிவனம் பகுதியில் தொடர் ஆடு திருடியவர்களை குறி வைத்து பிடித்த போலீசாரை பாராட்டி விழுப்புரம் எஸ்.பி சரவணன் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

author-image
WebDesk
New Update
sp

திண்டிவனம் பகுதியில் தொடர் ஆடு திருடியவர்களை குறி வைத்து பிடித்த போலீசாரை பாராட்டி விழுப்புரம் எஸ்.பி சரவணன் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் தொடர் ஆடு திருடியவர்களை குறி வைத்து பிடித்த போலீசாரை பாராட்டி விழுப்புரம் எஸ்.பி சரவணன் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

Advertisment

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் உட்கோட்ட பகுதியில் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய உதவிய தனிப்படையினர் காவல் உதவி ஆய்வாளர் சசிகுமார், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் கலைமணி, அய்யப்பன்,
தலைமை காவலர்கள் ஜெனார்த்தனன், பூபாலன், முதல்நிலை காவலர்கள் செந்தில் முருகன், கோபாலகிருஷ்ணன், பாரதி மற்றும் சிரஞ்சீவி ஆகியோர்களை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். 

விழுப்புரம் மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் தொடர் கன்னக்களவு திருட்டில் ஈடுபட்ட எதிரிகளை கைது செய்து சிறப்பாக பணியாற்றிய தனிப்படையினர் காவல் உதவி ஆய்வாளர் லியோ சார்லஸ், தலைமை காவலர்கள் மகாராஜா, பாலமுருகன், முதல்நிலை காவலர்கள் சத்தியன் மற்றும் நீலமேகம் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன்  நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Villupuram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: