Advertisment

கோயம்பேடு: தேமுதிக தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி

கோயம்பேட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விஜயகாந்த் தொண்டர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

author-image
WebDesk
New Update
Vijayakanth

கோயம்பேட்டில் தேமுதிக தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தினர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தேமுதிக நிறுவன தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் டிசம்பர் 27 புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு கொரோனா பெருந்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை காலை விஜயகாந்த் உயிரிழந்தார்.

Advertisment

இந்தச் செய்தி கேட்டு அவரது தொண்டர்கள் கண்ணீரில் நனைந்தனர். தேமுதிக தலைமையகத்தில் அருகிலுள்ள இரண்டு பாலங்களிலும் அவரது தொண்டர்கள் கண்ணீர் மல்க காத்திருந்தனர்.

இந்த நிலையில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை தீவு திடலில் வைக்கப்பட்டது. தற்போது அவரது உடல் சொர்க்க ரதத்தில் எடுக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

நிறைவாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும். இந்த நிலையில் கண்ணீர் மல்க விஜயகாந்தின் தொண்டர்கள் அந்த ரதத்தினை பெண் தொடர்ந்து செல்கின்றனர். கேப்டன் கேப்டன் என அழுதுக் கொண்டே பின்தொடருகின்றனர்.

இந்த ஊர்வலம் இன்று மாலை கோயம்பேடு சென்றடையும். தொடர்ந்து தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

விஜயகாந்த்தின் உடலானது சந்தனப் பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அந்த சந்தனப் பேழையில், புரட்சிக் கலைஞர் கேப்டன்' விஜயகாந்த் நிறுவனத் தலைவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம்' என்கிற வாசகம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் கோயம்பேட்டியில் சில ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைந்து செல்ல வைத்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Vijayakanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment