/indian-express-tamil/media/media_files/2025/06/11/M0KLDNJH2qVntLjXIJkQ.jpg)
விழுப்புரம் மதுவிலக்கு காவல்துறையினர் இன்று விழுப்புரம் நகர பகுதியில் இயங்கும் ஆயில் மில்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
விழுப்புரம் நகரப் பகுதியில் ஆயில் மில்களில் எத்தனால், மெத்தனால், உரிமம் இல்லாமல் வைத்திருகிறார்களா என விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. சரவணன் உத்தரவின் பேரில், போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்.
விழுப்புரம் மதுவிலக்கு காவல்துறையினர் இன்று விழுப்புரம் நகர பகுதியில் இயங்கும் ஆயில் மில்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின் பேரில், விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் கந்தசாமி அறிவுறுத்தலின் பேரில் ஆய்வாளர் சுஜாதா, உதவி ஆய்வாளர் சதீஷ் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு காவலர்கள் தலைமையில்
விழுப்புரம் நகரப் பகுதியில் உள்ள ஆயில் கம்பெனி மற்றும் கடைகளில் உரிமம் இல்லாமல் எத்தனால், மெத்தனால் வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என திடீர் சோதனை மேற்கொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.