Advertisment

சென்னையில் ஜெ.பி நட்டா பொதுக்கூட்டம்; அனுமதி மறுத்த காவல்துறை

சென்னையில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி நட்டா பொதுக்கூட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil nadu, BJP, DMK, JP Nadda, state bjp, L.Murugan, footprint, anti-national, shelter,news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

சென்னையில் பாஜக பொதுக்கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

 jp-nadda | tn-bjp | தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, என் மண் என் மக்கள் யாத்திரை நடத்திவருகிறார். இந்த யாத்திரை பிப்.25ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

Advertisment

அன்றைய தினம் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, கலந்துகொள்கிறார். முன்னதாக, பிப்.11ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவர் ஜெயப் பிரகாஷ் நட்டா கலந்துகொள்கிறார்.

இதற்காக சென்னையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு பெருங்குடி, சோழிங்கநல்லூர் மற்றும் நந்தனம் உள்ளிட்ட 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

இந்த 3 இடங்களில் ஏதேனும் ஒன்றில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. இதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. பொதுக்கூட்டம் என்பதால் மக்கள் அதிகளவில் கூடுவார்கள்; இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடும் எனக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தற்போது ஷெனாய் நகர் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி காவல்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tn Bjp Jp Nadda
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment