Advertisment

என் மண் என் மக்கள் யாத்திரை: அண்ணாமலை உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை மீது ஆம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். என் மண் என் மக்கள் யாத்திரையின்..

author-image
WebDesk
New Update
Annamalai

தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, மாநிலம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற யாத்திரை வாயிலாக தமிழக மக்களை சந்தித்து வருகிறார்.

இந்த யாத்திரையை அவர் பல்வேறு கட்டங்களாக நடத்திவருகிறார். இந்தப் பாதயாத்திரையை தென் மாவட்டங்களில் நிறைவு செய்துவிட்டார்.

Advertisment

யாத்திரையின் நிறைவு நாளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் என் மண் என் மக்கள் பாத யாத்திரை நிகழ்வு நடந்தது.

அப்போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி ஆம்பூர் போலீசார் தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, மாவட்டத் தலைவர் வாசு, நகரத் தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட 10 பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment