/indian-express-tamil/media/media_files/lxPTTPC8iIPzUPoukFGz.jpg)
இந்த சம்பவம் தொடர்பாக பேரூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், பேரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகளின்போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கோவை பேரூர் பட்டீசுவர் கோவில் பின்புறம் உள்ள வடக்கு வீதியில் இருந்து நொய்யல் ஆறு வரை பேரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக, சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு குழி தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்ற வந்த நிலையில் இன்று குழியை மூடும் பணிகள் நடைபெற்றது.
இதற்காக இரண்டு ஜே.சி.பி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது. அப்போது, அங்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் (49) என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த பழைய திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
இதில் கட்டுமான இடர்பாடுகளில் சிக்கி வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவலறிந்து வந்த பேரூர் போலீஸார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் வேல்முருகன் உடலை மீட்டு ஆம்புலென்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பேரூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கமாக சுமார் 10"க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பணியாற்றி வரும் நிலையில் இன்று குழிகளை மூடும் பணிகள் நடைபெற்று வந்ததால் வேல்முருகன் மட்டும் சுற்றுசுவர் அருகே பணியில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.