/tamil-ie/media/media_files/uploads/2023/07/WhatsApp-Image-2023-07-03-at-15.24.20.jpeg)
மாணவிகள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம்
கல்லூரி மாணவ மாணவிகள் சமூக வலைதளங்களை கவனமுடன் கையாள வேண்டும் எனவும் கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பிற்காக துவங்கப்பட்டுள்ள போலீஸ் அக்கா திட்டத்தில் மாணவிகள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கோவையில் நடைபெற்ற கல்லூரி விழாவில் பேசினார்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பி.பி.ஜி.கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ,மாணவிகளை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுஸ்வாகதம் எனும் தலைப்பில் நடைபெற்ற இதில் பி.பி.ஜி.கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு தலைமை வகித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/WhatsApp-Image-2023-07-03-at-15.24.20-1.jpeg)
விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளிடையே பேசினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது பள்ளி பருவத்தில் இருந்து கல்லூரி வாழ்க்கையை துவங்க உள்ள மாணவ,மாணவிகள் தங்களது இலட்சியத்தை இலக்காக வைத்து அதனை அடைய சரியான வழியை தேர்வு செய்தால்
வெற்றி நிச்சயம் எனவும் மேலும் சைபர் குற்றப்பிரிவில் தற்போது வரும் புகார்களில் அதிக புகார்கள் கல்லூரி மாணவ,மாணவிகள் தரப்பலிருந்து வருவதாக கூறிய அவர்
சமூக வலைதளங்களை கவனமுடன் கையாள வேண்டும் எனவும், கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பிற்காக துவங்கப்பட்டுள்ள போலீஸ் அக்கா திட்டத்தில் மாணவிகள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என இவ்வாறு தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.