கரூர் துயர சம்பவம்: த.வெ.க. பொதுச் செயலர் ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படை அமைப்பு

த.வெ.க பொதுச் செயலாளர் ஆனந்தை கைது செய்ய மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

த.வெ.க பொதுச் செயலாளர் ஆனந்தை கைது செய்ய மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
anandh

கரூர் துயர சம்பவம்: த.வெ.க. பொதுச் செயலர் ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படை அமைப்பு

த.வெ.க தலைவர் விஜய்  கடந்த 27-ஆம் தேதி கரூரில் பரப்புரை மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 

Advertisment

இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கரூர் சம்பவம் தொடர்பாக  தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் சி. டி. ஆர்.

நிர்மல் குமார் உள்பட 5 பேர் மீது கரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இதையடுத்து, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மத்திய மாநகர நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, த.வெ.க பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரை போலீசார் விரைவில் கைது செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று (செப்டம்பர் 30) மனு தாக்கல் செய்திருந்தனர்.

Advertisment
Advertisements

இவர்களது மனு மீதான விசாரணை நாளை (அக்.3) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  இதையடுத்து ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்கள் இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Vijay TVK

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: