/indian-express-tamil/media/media_files/2024/11/05/2IlEeM8cAmzadGvN2rFO.jpg)
சென்னை, எழும்பூரில் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது அவர், திராவிடர்கள், தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பரப்பும் விதமாக பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதற்கு பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். குறிப்பாக, தெலுங்கு மக்கள் மற்றும் அமைப்பினரிடம் இருந்து கடும் எதிர்வினையாற்றப்பட்டது.
இதையடுத்து தனது உரைக்கு, நடிகை கஸ்தூரி வருத்தம் தெரிவித்திருந்தார். எனினும், பல்வேறு மாவட்டங்களில் அவருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், நடிகை கஸ்தூரி தற்போது தலைமறைவாக இருக்கிறார்.
இதனிடையே, மதுரை திருநகர் நாயுடு மாகாஜன சங்கம் தாக்கல் செய்த புகாரின் பேரில், கஸ்தூரி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தனக்கு முன் ஜாமின் வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கஸ்தூரி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த ஜாமின் மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்தார். அதன்பேரில் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரம் காண்பித்து வருகின்றனர். குறிப்பாக, தலைமறைவான நடிகை கஸ்தூரி ஆந்திராவில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் உதவியுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில், ஆந்திராவில் முகாமிட்டுள்ள போலீசார் அவரை தீவிரமாக தேடுகின்றனர். எனவே, விரைவில் நடிகை கஸ்தூரி கைது செய்யப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.