Advertisment

தூத்துக்குடியில் மினிலாரி ஏற்றி உதவி ஆய்வாளர் கொலை

Police sub inspector murdered at eral தப்பி ஓடிய முருகவேலை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Police sub inspector murdered at eral tuticorin district Tamil News

Police sub inspector murdered at eral tuticorin district Tamil News

Tuticorin SI Murder Tamil News : தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மீது மினிலாரி ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

54 வயதான பாலு, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக  பணியாற்றி வந்தார். இவர் கொற்கையில் ரோந்து பணியில் இருந்தபோது, வாழவல்லான் அருகே குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டவர்களைத் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது போதையில் சுற்றிய முருகவேல் என்பவரை பாலு கண்டித்ததாகத் தெரிகிறது.

இதனால் கோபமடைந்த முருகவேல், பாலு மீது மினி லாரி ஏற்றிக் கொன்றுவிட்டுத் தப்பியுள்ளார். தப்பி ஓடிய முருகவேலை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்று போலீஸ் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரவுடியை பிடிக்கச் சென்ற காவலர் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Crime Tuticorin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment