கார்- பைக் மோதியதாக சர்ச்சை: வி.சி.க தலைவர் திருமா- வக்கீல் ராஜீவ் காந்தி இன்று நேரில் ஆஜராக சம்மன்

உயர் நீதிமன்றம் அருகே திருமாவளவன் கார், பைக் மீது மோதியதாகப் புகாரளித்த வழக்கறிஞர் ராஜீவ்காந்தி மற்றும் வி.சி.க. தரப்பினர் நேரில் ஆஜராகுமாறு எஸ்பிளனேடு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

உயர் நீதிமன்றம் அருகே திருமாவளவன் கார், பைக் மீது மோதியதாகப் புகாரளித்த வழக்கறிஞர் ராஜீவ்காந்தி மற்றும் வி.சி.க. தரப்பினர் நேரில் ஆஜராகுமாறு எஸ்பிளனேடு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
2 seat kuruma

கார்- பைக் மோதியதாக சர்ச்சை: வி.சி.க தலைவர் திருமா- வக்கீல் ராஜீவ் காந்தி இன்று நேரில் ஆஜராக சம்மன்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது, நீதிமன்ற அறையில் வழக்கு விசாரணையின்போது, காலணி வீச முயற்சி நடந்தது. இதை கண்டித்து, அக்.7-ம் தேதி வி.சி.க.,வின் சமத்துவ வழக்கறிஞர் சங்கம் சார்பில், ஐகோர்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வி.சி., தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார். மதியம் 2:30 மணியளவில் உயர்நீதிமன்றம் அருகே, என்.எஸ்.சி., போஸ் சாலை வழியாக, திருமாவளவன் காரில் சென்றார். அப்போது, முன்னாள் சென்ற ஸ்கூட்டர் மீது, திருமாவளவன் சென்ற கார் மோதியதாக கூறப்படுகிறது.

Advertisment

இதனால் ஆத்திரமடைந்த அவர், திடீரென திருமாவளவன் கார் ஓட்டுநருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே, காரில் திருமாவளவன் இருந்ததால் வி.சி.கவினர் ஒன்றுகூடி வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதன்பின் தாக்கப்பட்ட வழக்கறிஞரை, போலீசார், எஸ்பிளனேடு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில், அவர் அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் வட்டச் செயலரும், வழக்கறிஞருமான நந்தம்பாக்கத்தை சேர்ந்த ராஜிவ்காந்தி, 36, என்பது தெரிய வந்தது. அவர் தன் மீது தாக்குதல் நடத்திய, வி.சி.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போலீசில் புகார் அளித்தார். வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கார் மோதலை மறுத்த திருமா, அந்த இளைஞர் வேண்டுமென்றே வம்புக்கு இழுத்ததாகவும், வேண்டுமென்றே காரை நிறுத்திக் கூச்சலிட்டதாகவும் கூறினார். மேலும், இந்தச் சம்பவம் திட்டமிட்ட தாக்குதல்போல ஊடகங்களால் திரித்து பரப்பப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். இந்நிலையில், உயர்நீதிமன்றம் அருகே திருமாவளவன் கார், பைக் மீது மோதியதாக புகாரளித்த வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, விசிக தரப்பினருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி எஸ்பிளனேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment
Advertisements
Thirumavalavan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: