Advertisment

'கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன்': சிகிச்சைக்கு வந்த சவுக்கு சங்கர் பகீர்

சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்ததாக கூறியபடி சவுக்கு சங்கர் அரசு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
 savukku.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

யூடியூபர் சவுக்கு சங்கரை நான்காம் தேதி கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் தேனியில் வைத்து கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். காவல்துறையினர்களையும் பெண் காவலர்களையும் அவதூறாக  பேசியதாக ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

Advertisment

அதனை தொடர்ந்து அவர்  சிறையில் தாக்கப்பட்டதாகவும் கையில் காயம் ஏற்பட்டதாகவும் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். அவர் கூறியது போலவே கடந்த வாரம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கருக்கு கையில் மாவு கட்டு போடப்பட்டது. இந்நிலையில் மறு சிகிச்சைக்காக மீண்டும் கோவை மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனைக்கு இன்று (மே 13) அழைத்து வரப்பட்டார்.  அவருக்கு அந்த பழைய மாவு கட்டு அவிழ்க்கப்பட்டு புதிதாக மாவு கட்டு போடப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து வெளியில் அழைத்து வரப்படும் பொழுது சவுக்கு சங்கர் " சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் தான் என் கைகளை உடைத்தார். கோவை சிறையில் தான் உனக்கு சமாதி" என்று அவர் மிரட்டுவதாகவும் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டை வைத்தபடியே வெளியில் வந்தார்.  அதனை தொடர்ந்து மீண்டும் அவரை போலீசார் கோவை சிறைக்கு அழைத்து சென்றனர். 

தற்போது சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்கும் மனுவானது இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ள நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய காவல்துறையினர். 

செய்தி: பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

     

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment