மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் கடந்த ஞாயிற்றுகிழமை பேஷன் ஷோ நிகழ்வு நடைபெற்றது. இதில் நடிகை யாஷிகா ஆனந்த கலந்துகொண்டார். இந்நிலையில் போட்டியின் ஏற்பாட்டாளர்கள் வற்புத்தியதால், பாதுகாப்புக்கு வந்த காவல் துறையினர் ஸ்டைலாக ரேம்ப் வாக் செய்தனர்.
Advertisment
ஊடகங்களில் இது குறித்த செய்தி வைரலான நிலையில் தற்போது செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் ரேணுகா, அஸ்வினி ,நித்தியசீலா, சிவனேசன் ஆகிய நான்கு காவலர்களை பணியிட மாற்றம் செய்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மற்ற காவல் நிலையங்களில் இந்த ஐந்து காவலர்களும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலர்களை மகிழ்விக்கும் விதமாக தெறி பட போலீஸ் பாடல் பின்னணியில் ராம்ப் வாக் சென்ற காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news