Advertisment

காவல்துறை அத்துமீறல்: இருளர் இன மக்களுக்கு ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு!

விழுப்புரம் திருக்கோவிலுாரில், அத்துமீறி இருளர் இன மக்களை கைது செய்து, சிறையில் அடைத்த வழக்கில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 75 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி தமிழக அரசுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

author-image
WebDesk
New Update
IIT Madras scholar rape case

IIT Madras scholar rape case The Chennai police summoned the main accused

சென்னை: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலுார் அருகே போலீசாரால் துன்புறுத்தப்பட்ட இருளர் சமூகத்தைச் சேர்ந்த 15 குடும்பங்களுக்கு ரூ.75 லட்சம் (தலா ரூ.5 லட்சம்) இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

திருக்கோவிலுார் அருகே உள்ள டி மண்டபம் கிராமத்தைச் சேர்ந்த கே.லட்சுமி, விழுப்புரம் ஏடிஎஸ்பியிடம் (கூடுதல் காவல் கண்காணிப்பாளர்) அளித்த மனுவின் அடிப்படையில், நவம்பர் 27, 2011 அன்று ஒரு தமிழ் நாளிதழில் வந்த செய்தியை ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

அவரது மனுவில், அவரது கணவர் காசியை போலீசார் இரு சக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றனர், பின்னர் இரவில், லட்சுமி, அவரது மாமா, இரண்டு சகோதரிகள், மூன்று மைத்துனர்கள், அவரது ஒன்றுவிட்ட சகோதரி அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். போலீசார் தங்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக லட்சுமி குற்றம் சாட்டினார். அவர் தனது மனுவில், தன்னையும் மூன்று பெண்களையும், ஒரு தோப்பில் வைத்து காவலர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின்,புலனாய்வுப் பிரிவான ஏடிஜிபிக்கு ஆணையம் உத்தரவிட்டது.

ஆணையத்தின் விசாரணைப் பிரிவு சமர்ப்பித்த அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட பெண்களை விழுப்புரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பரிசோதித்தனர். அதன்படி, சென்னை மருத்துவக் கல்லூரியின் தடயவியல் மருத்துவக் கழக இயக்குநர், பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று கருத்து தெரிவித்தனர்.

குற்றஞ்சாட்டப்பட்ட பெண்களை போலீசார் அவமானப்படுத்தாவிட்டாலும், இரவில் அவர்களை காவலில் வைத்திருப்பது சட்ட விரோதமானது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த காவல் துறையினர், தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்தனர். மேலும் தாங்கள் பெண்களை காவலில் வைக்கவில்லை என்றும், எஸ்சி/எஸ்டி சட்டத்தின் விதிகளைப் பயன்படுத்தி அரசாங்கத்திடம் இருந்து பணப் பலன்களைப் பெறுவதற்காக யாரோ ஒருவரால் இந்த வழக்கில் பொய்யாகச் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டனர்.

சமர்ப்பிப்பை ஆய்வு செய்த கமிஷன், புகாரில் கூறப்பட்டுள்ளபடி, காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமை எதுவும் நிகழவில்லை. ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் பெண்கள் என்பதால் தெளிவான மனித உரிமை மீறல்கள் இருப்பதாகக் குறிப்பிட்டது, மேலும் அவர்கள் மகளிர் போலீசார் இல்லாமல் கைது செய்யப்பட்டு, இரவில் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவது மட்டுமின்றி, மூன்று மாதங்களுக்குள் காவல்துறையினருக்கு எதிரான துறை ரீதியான நடவடிக்கை குறித்த இறுதி அறிக்கையை டிஜிபியிடம் ஆணையம் கோரியதுடன், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்கு தொடர்பான இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய டிஜிபிக்கு அறிவுறுத்துமாறு அரசுக்கு உத்தரவிட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu News Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment