சென்னை திருவல்லிக்கேணி பகுதியில், போலீசார் நேற்று ( ஜூன் 29ம் தேதி) வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது TN09 F5044 பதிவு எண் கொண்ட புல்லட் வாகனத்தை இளைஞர் ஒருவர் ஓட்டிவந்தார். தலைக்கவசம் ( ஹெல்மெட்) அணியாததால், போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
வண்டியை நிறுத்தியதில் இருந்தே, போலீசாருடன் தொடர்ந்து அந்த இளைஞர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். அனைவரையும் மரியாதைக்குறைவாகவும் அவர் பேசிவந்தார். மற்றொரு போலீஸ் சமாதானம் பேசவே, நான் இன்ஸ்பெக்டரோட மகன். நான் வக்கீல், நீ கோர்ட்டுக்கு வா உன்னய வெட்டுறேன் என்று பேசினார்.
போலீசார், அந்த இளைஞர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.