அமைதியை நேசிப்போருக்கு பேரிழப்பு... போப் பிரான்சிஸ் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைவையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைவையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Vijay, Stalin, EPS

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவிற்கு உலகம் முழுதும் உள்ள கத்தோலிக்க மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisment

ஸ்டாலின் இரங்கல்:

அந்த வகையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன்படி, முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், "கத்தோலிக்க திருச்சபையை முற்போக்கான விழுமியங்களுடன் வழிநடத்திய போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன்.

 

Advertisment
Advertisements

 

ஏழை மக்கள் மீதான போப்பின் அரவணைப்பு, அர்ப்பணிப்பு உலகத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. மனித நேயத்தை இந்த உலகத்திற்காக போப் பிரான்சிஸ் விட்டுச் சென்றுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மோடி இரங்கல்:

"போப் பிரான்சிஸ் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. இத்தகைய துயரமான தருணத்தில் இருக்கும் கத்தோலிக்க சமூகத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது இரக்கம் மற்றும் பணிவுக்காக ஆன்மிகத்தின் கலங்கரை விளக்கமாக எப்போதும் போப் நினைவுகூரப்படுவார்" என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

 

நயினார் நாகேந்திரன் இரங்கல்:

"உலக கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆம் திருத்தந்தை போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது.

 

 

தன் வாழ்நாள் முழுவதும் ஆன்மிக சேவைக்காகவும், சமூக சமத்துவத்திற்காகவும், மத நல்லிணக்கத்திற்காகவும் அர்ப்பணித்து அயராது உழைத்த போப் ஆண்டவரின் புனித ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் பாதங்களில் சற்று இளைப்பாறட்டும் என பிரார்த்தித்துக் கொள்கிறேன்" என்று தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி இரங்கல்:

"புனித திருத்தந்தை போப் பிரான்சிஸ் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். அமைதி, அன்பு, ஒற்றுமை என்ற செய்தியால் பல கோடி மக்களை ஊக்கப்படுத்தியவர் போப். உலகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்" என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் கூறியுள்ளார்.

 

 

வைகோ இரங்கல்:

"சாதி மதங்களால் எந்த ரத்தக்களறியும் ஏற்படக்கூடாது என்று அருள்மொழி வழங்கியவர் போப் ஆண்டவர். அருள்மொழி வழங்கிய போப்பரசர் மறைவு அனைத்து தரப்பினரை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. துயர் நிறைந்த ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

விஜய் இரங்கல்:

 

 

போப் ஆண்டவர் மறைவிற்கு தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அதன்படி, "உலகம் முழுதும் பல ஆயிரக்கணக்கான மக்களால் ஈர்க்கப்பட்ட கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தமடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Pope Francis

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: