10 நாளில் புதிய விதிமுறை... அதுவரை எந்த அரசியல் கட்சிக்கும் அனுமதி இல்லை: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம், புதிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும் வரை, மாநிலத்தில் உள்ள எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ரோடு ஷோக்கள் நடத்த அனுமதி இல்லை என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனிடையே

சென்னை உயர் நீதிமன்றம், புதிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும் வரை, மாநிலத்தில் உள்ள எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ரோடு ஷோக்கள் நடத்த அனுமதி இல்லை என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனிடையே

author-image
WebDesk
New Update
Karur Vijay

சென்னை உயர் நீதிமன்றம், புதிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும் வரை, மாநிலத்தில் உள்ள எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ரோடு ஷோக்கள் நடத்த அனுமதி இல்லை என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் இடை மனுதாரராக சேர அனுமதிக்கக் கோரி அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

கடந்த மாதம் செப்டம்பர் 27-ம் தேதி கரூர் மாவட்டத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்யின் பரப்புரைக் கூட்டத்தின்போது ஏற்பட்ட கடுமையான நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும், பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோட் ஷோக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரும் வழக்கை விசாரிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இருந்தது.

உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. கரூர் கூட்ட நெரிசல் வழக்குடன், விஜய்யின் பரப்புரைக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டதை எதிர்த்து தவெக தரப்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வழக்கும் தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு அறிவிக்கப்படும் வரை, மாநிலத்தில் உள்ள எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ரோடு ஷோக்கள் நடத்த அனுமதி இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் பணியில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் கருத்துகளைப் பெற்று, விரைவில் விதிமுறைகள் இறுதி செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Advertisment
Advertisements

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தங்கள் தரப்பையும் இடை மனுதாரராக சேர்க்க அனுமதிக்கக் கோரி அதிமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில், இந்த வழக்கில் தங்களது வாதங்களையும், கருத்துகளையும் நீதிமன்றத்தில் முன் வைக்க அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, புதிய விதிமுறைகள் வரும் வரை அனைத்து அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ திட்டங்களிலும் தற்காலிகத் தடையை ஏற்படுத்தியுள்ளது.

தவெக வழக்கறிஞர் எஸ். அறிவழகன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, கரூர் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் சதி இருப்பதாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இந்தச் சம்பவம் ஒரு திட்டமிட்ட சதிச்செயல் என்றும், எனவே இந்த வழக்கை ஒரு சுயாதீன அமைப்பு கொண்டு விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பதாகவும், இந்த விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் உடனடியாகப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கரூர் நிகழ்ச்சி சட்டவிரோதமானது இல்லை என்று தவெக தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் வைத்தனர். நிகழ்ச்சியின் போது எந்தவிதமான சட்டவிரோதச் செயலோ, பொதுச் சொத்துக்கு எந்தவித சேதாரமோ நடைபெறவில்லை. அவ்வாறு நடந்திருந்தால், தமிழ்நாடு காவல்துறையினர் நிச்சயமாக எங்கள் மீது வழக்கு தொடர்ந்திருப்பார்கள் என்றும், அப்படி எந்த வழக்கும் தொடங்கப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

கரூர் நிகழ்ச்சி சட்டவிரோதமானது இல்லை என்று தவெக தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் வைத்தனர். நிகழ்ச்சியின் போது எந்தவிதமான சட்டவிரோதச் செயலோ, பொதுச் சொத்துக்கு எந்தவித சேதாரமோ நடைபெறவில்லை. அவ்வாறு நடந்திருந்தால், தமிழ்நாடு காவல்துறையினர் நிச்சயமாக எங்கள் மீது வழக்கு தொடர்ந்திருப்பார்கள் என்றும், அப்படி எந்த வழக்கும் தொடங்கப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து, ஆளும் கட்சிக்கு எதிராக வழக்கறிஞர்கள் கேள்விகளை எழுப்பினர். "சமீபத்தில், ஆளும் கட்சியின் தலைவர் (முதல்வர்) கிருஷ்ணகிரியில் ரோடு ஷோ நடத்தினார். அவருக்கு எந்த விதமான வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது?" என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். தங்கள் நிகழ்ச்சிக்கு மட்டும் கடுமையான நிபந்தனைகள் விதிப்பதையும், அனுமதி மறுப்பதையும் சுட்டிக்காட்டி, அரசியல் கட்சிகளுக்கு இடையே சமத்துவமின்மை கடைபிடிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினர்.

road show Politics

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: