Advertisment

தி.மு.க வேட்பாளர் ஆ.ராசாவிற்கு ஆதரவாக செயல்படாததால் தேர்தல் அதிகாரி மிரட்டல்

நீலகிரி தொகுதி தி.மு.க வேட்பாளர் ஆ.ராசாவிற்கு சாதமாக செயல்படுவதாக மாவட்ட தேர்தல் அதிகாரி மீது உதவி செலவினப் பார்வையாளர் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நீலகிரி தொகுதி தி.மு.க வேட்பாளர் ஆ.ராசாவிற்கு சாதமாக செயல்படுவதாக மாவட்ட தேர்தல் அதிகாரி மீது உதவி செலவினப் பார்வையாளர் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Advertisment

ஆ.ராசாவின் தேர்தல் செலவின விவரங்களை குறைத்துக் காட்டும்படி, மாவட்ட தேர்தல் அதிகாரி தொந்தரவு செய்வதாக உதவி செலவினப் பார்வையாளர் சரவணன் தேர்தல் ஆணையத்திற்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில் தேர்தல் செலவு விவரங்களை கணகிட்டபோது தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா தாக்கல் செய்த செலவில் பல லட்சம் ரூபாய் வித்தியாசம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 8ம் தேதி தி.மு.க வேட்பாளரின் செலவின விவரங்களை  ஆட்சியரின் முகாம் அலுவலகத்திற்கு கொண்டுவரச் சொல்லி பார்வையிட்டு ஆவணங்களை புகைப்படம் எடுத்துகொண்டதாகவும், வேட்பாளரின் செலவு விரவரங்களில் பாதகமாக நடக்கக்கூடாது என தேர்தல் அதிகாரியை மிரட்டியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், உதவி செலவின பார்வையாளர் புகார் தொடர்பாக மாவட்ட தேர்தல் ஆதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும், விளக்கத்தின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment