ஆழியார் கவி அருவியில் தீடீர் வெள்ளப் பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் கவியருவியில் தீடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் கவியருவியில் தீடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Pollachi Aliyar  Kavi Aruvi Falls banned for Tourist

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக கவி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

coimbatore: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் இயற்கை எழில் சார்ந்த மனதை கொள்ளை கொள்ளும் ரம்யமாக காட்சியளிக்கும் பகுதியாகும். இங்கு விடுமுறை நாட்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவதும் வழக்கம். 

Advertisment

இந்நிலையில், பள்ளிகள் விடுமுறை தினம் என்பதால்  ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆழியார் கவியருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஆழியார், ஆழியார் அணை பூங்கா, கவி அருவி உள்ளிட்ட இடங்களுக்கு படையெடுத்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக  கவி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, வனதுறையினர் கவியருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதித்தனர். இதனால் சுற்றுலா பணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பினர். 

Advertisment
Advertisements

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: