ரகுமான், கோவை
Coimbatore district news in tamil: தமிழகத்தில் தேங்காய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக கொப்பரை தேங்காய் விலை குறைந்து கொண்டே வருகிறது. இதனால் தென்னை விவசாயிகள் மற்றும் தேங்காய் வியாபாரிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள வாழைக்கொம்பு நாகூர் பகுதியைச் சேர்ந்த தேங்காய் வியாபாரி சம்பத்குமார் தேங்காய் வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் தென்னை மர மாத்திரையை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து ஆனைமலை போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தென்னை விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil