Advertisment

பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பு வீச்சு: தி.மு.க- அ.தி.மு.க மோதல் ஏன்?

கொத்தவாடி குளம் 27 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதையடுத்து, அதிமுகவினருடன் குளத்துக்கு சென்ற பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பு வீசப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

author-image
WebDesk
New Update
Pollachi Jayaraman attacks by sleeper, tension between AIADMK and DMK cadres, AIADMK and DMK cadres claims Restoration of Kothavadi Tank, பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பு வீச்சு, திமுக- அதிமுக மோதல், பொள்ளாச்சி ஜெயராமன், கொத்தவாடி குளம், கிணத்துக்கடவு, கோவை, அதிமுக, திமுக kinathukadavu, coimbatore, DMK, AIADMK

கோவை கிணத்துக்கடவு அருகே சீரமைக்கப்பட்ட குளத்தைப் பார்க்கச் சென்ற அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பு வீசப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு காரணம் அங்கே அதிமுகவினரும் திமுகவினரும் மோதலில் ஈடுபட்டதாகக் கூறுகின்றனர்.

Advertisment

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள கொத்தவாடி குளத்தில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நீர் நிரம்பியதையடுத்து, குளத்தை சீரமைத்தது நாங்கள்தான் அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சியினரும் உரிமை கோரியதால் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை பதற்றம் நிலவியது.

அதிமுகவினர் அழைப்பின் பேரில் கொத்தவாடி குளத்திற்குச் சென்ற பொள்ளாச்சி எம்.எல்.ஏ வி.ஜெயராமன் மீது அடையாளம் தெரியாத நபர்கள் செருப்புகளை வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் மற்றும் அவருடன் இருந்த அதிமுகவினர் பொள்ளாச்சி ஜெயராமனை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள கொத்தவாடி குளம் 27 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியதைக் கொண்டாடும் நிகழ்ச்சிக்கு அப்பகுதியில் உள்ள மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். குளம் நிரம்பியதைக் கொண்டாடும் நிகழ்ச்சியில், பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்யப்பட்டது.

அதிமுகவினர் அழைப்பின் பேரில் கொத்தவாடி குளத்திற்குச் சென்ற பொள்ளாச்சி எம்.எல்.ஏ வி.ஜெயராமன் மீது அடையாளம் தெரியாத நபர்கள் செருப்புகளை வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் மற்றும் அவருடன் இருந்த அதிமுகவினர் பொள்ளாச்சி ஜெயராமனை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.

இந்த நிகழ்ச்சிக்கு, அதிமுகவினர் பொள்ளாச்சி ஜெயராமனை அழைத்து வந்தது திமுகவினரை எரிச்சலடையச் செய்தது என்று போலீஸார் தெரிவித்தனர். கொத்தவாடி குளத்தை சீரமைத்ததாக அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சியினரும் உரிமை கொண்டாடியதால் இரு கட்சியினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கொத்தவாடி குளத்தை சீரமைக்கும் பணியில் தன்னார்வலர்கள், விவசாயிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ஆண்டு பொள்ளாச்சி எம்பி கே.சண்முகசுந்தரம், கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறையின் நீர்வள அமைப்பு ஆகியவை இணைந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் இரு துணைக் கால்வாய்களில் இருந்து மழைக்காலத்தில் உபரி நீர் சீராக வருவதை உறுதி செய்ததையடுத்து குளத்துக்கு நீர்வரத்து அதிகரித்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.

தற்போது சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் உள்ளது. எப்பிங்கர் டூலிங் ஏசியா என்ற தனியார் நிறுவனம் இந்த குளத்தை சீரமைக்கவும் கரைகளை வலுப்படுத்தவும் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதி மூலம் ரூ.87 லட்சத்தை வழங்கியுள்ளது” என்று பி.கே. பேரூர் படித்துறை பாதுகாப்பு இயக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Dmk Aiadmk Coimbatore Pollachi Jayaraman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment