Advertisment

காலநிலை மாற்றங்களால் உணவு பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் - பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம் எச்சரிக்கை

காலநிலை மாற்றங்களால் இந்தியாவில் அரிசி,கோதுமை போன்ற உணவு பொருட்களுக்கு  பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் எச்சரித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
environment conclave

இளைஞர்களும் காலநிலையும் மாநாடு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மனிதகுலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள பருவநிலை   மாற்றத்தின் விளைவுகளையும் அதனால் உலகம் சந்திக்க கூடிய பெரும் சவால்கள் குறித்து இளம் தலைமுறையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில்  இளைஞர்களும் கால நிலையும் எனும் மாநாடு நடைபெற்றது.

Advertisment

கோவை தனியார் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, சிறுதுளி மற்றும் பூவுலகின் நண்பர்கள் இணைந்து இளைஞர்களும் கால நிலையும் என்ற கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களான மகாராஷ்டிராவை  சேர்ந்த ரந்தீர் பிட்டு சேகல்,  இந்தியாவின் தண்ணீர் மனிதர் என அழைக்கப்படும் முனைவர் ராஜேந்திர சிங், சிறுதுளி நிர்வாக அறங்காவலர்  வனிதா மோகன், கல்லூரியின் தலைவர் நந்தினி ரங்கசாமி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்  சுந்தர்ராஜன், ஆகியோர் கலந்து கொண்டு சுற்றுசூழல் பாதுகாப்பின் அவசியத்தை இளைஞர்கள் தெரிந்து கொள்வதன் அவசியத்தை கூறினர்.

மாநாடு நிறைவு விழாவில்,  பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு பேசுகையில், நாளைய சந்ததிகள் ஆரோக்கியமாக வாழ சுற்றுச்சூழலை காப்பதிலும் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவதிலும், இதற்கான புதுமையான தீர்வுகளை கொடுப்பதிலும் இளம் தலைமுறையின்  பங்கு மிக முக்கியம் என சுட்டி காட்டினார்..கால நிலை மாற்றத்தை எதிர்த்து,போராட வேண்டியது அவசியம் என கூறிய அவர்,பருவநிலை மாற்றங்களால் இந்தியாவில் அரிசி,கோதுமை போன்ற உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக  மத்திய விவசாய துறை  எச்சரித்துள்ளதாக தெரிவித்தார்.

செய்தி: பி. ரஹ்மான்

coimbotore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment