Advertisment

Pollachi Sexual Assault: வீடியோக்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் காவல்துறை

மெமரி கார்டு ரெக்கவரி என்ற சாஃப்ட்வேர் மூலம், ஃபோனிலிருந்து அழிக்கப்பட்ட வீடியோ மற்றும் படங்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pollachi Sexual Assault case

Pollachi Sexual Assault: தமிழகத்தையே கடந்த சில நாட்களாக உலுக்கி வருகிறது பொள்ளாச்சி சம்பவம்.

Advertisment

பொள்ளாச்சிக்கு படிக்க மற்றும் வேலை செய்ய வரும் கிராமப்புற பெண்களை காதலிப்பதாகக் கூறி, அவர்களை ஆபாச படமெடுக்கும் கும்பலைப் பற்றி தற்போது தெரிய வந்திருக்கிறது.

இவர்கள் சுமார் 200-க்கும் அதிகமான பெண்களை ஏமாற்றி படமெடுத்திருப்பதாக தெரிகிறது. இந்த கும்பலைச் சேர்ந்த,  திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்ஃபோன்கள் கோவையிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மெமரி கார்டு ரெக்கவரி என்ற சாஃப்ட்வேர் மூலம், ஃபோனிலிருந்து அழிக்கப்பட்ட வீடியோ மற்றும் படங்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

அதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களை அறிந்துக் கொண்டு, அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெற தேவையான நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே கைதான சபரிராஜன் மற்றும் திருநாவுக்கரசின் ஃபோனிலிருந்து நூற்றுக்கும் அதிகமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Pollachi Pollachi Jayaraman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment