பொள்ளாச்சி பாலியல் வழக்கு : சபரிராஜன், திருநாவுக்கரசு மீதான குண்டர் சட்டத்தை நீக்கக் கோரி மனு

குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்து பிறபித்த உத்தரவை குடும்பத்தினருக்கு முறையாக தெரிவிக்கவில்லை என மனுவில் குற்றச்சாட்டுள்ளது.

குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்து பிறபித்த உத்தரவை குடும்பத்தினருக்கு முறையாக தெரிவிக்கவில்லை என மனுவில் குற்றச்சாட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pollachi sexual abuses issue, Pollachi Sexual Case

Pollachi Sexual Case : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த திருநாவுக்கரசு, சபரி ராஜன் ஆகியோர் எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் உள்துறைச் செயலாளர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் 4 வாரத்துக்குள் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இது தொடர்பாக திருநாவுக்கரசுவின் தாயார் லதா மற்றும் சபரி ராஜன் தாயார் பரிமளா ஆகியோர் சார்பில் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில், பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தங்கள் மகன்களுக்கு எதிராக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின்படி கோவை மாவட்ட ஆட்சியர் கடந்த மார்ச் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் உத்தரவிட்டார்.

குண்டர் சட்ட அடைத்து பிறப்பிக்க உத்தரவு விதிமுறைகளை முறையாக அரசு பின்பற்றவில்லை.பாலியல் வன்கொடுமை வழக்கை உரிய சட்டத்தின் கீழ் தான் விசாரிக்க வேண்டும். குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்து பிறபித்த உத்தரவை குடும்பத்தினருக்கு முறையாக தெரிவிக்கவில்லை என மனுவில் குற்றச்சாட்டுள்ளது.

எனவே விதிமுறைகளை பின்பற்றாமல் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த குண்டர் தடுப்பு சட்டத்தில் உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுவிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

இந்த வழக்கு விடுமுறைக்கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனு விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனு தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க : பொள்ளாச்சி பாலியல் வழக்கு : 8 நபர்கள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு

Coimbatore Pollachi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: