New Update
/
கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி நகர்ப்புற பகுதிகளில் உள்ள கிழக்கு, மேற்கு தாலூக்கா, மகாலிங்க புரம், பொள்ளாச்சி நகராட்சி, புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம், தேர் முட்டி, பல்லடம் ரோடு, காந்தி சிலை சந்திப்பு, மகாலிங்கபுரம் ஆர்ச், கடை வீதி ஆகிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர், ஹெல்மெட், சீட் பெல்ட், குடி போதையில் வரும் நபர்கள் ஆகியோரை கண்காணித்து வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி காந்தி சிலை ஸ்டேட் பேங்க் முன்பு போக்குவரத்து தலைமை காவலர் இளையராஜா வாகன சோதனையில் இருந்த பொழுது காரில் வந்த நபர் சீட் பெட் அணியாமல் வந்ததாக தெரிகிறது. இதை தலைமை காவலர் தனது மொபைல் போனில் வீடியோ எடுக்க முயற்சி செய்தும் கை ஓங்கி அடிக்க முற்பட்டதாகவும் அப்போது காரில் இருந்த நபரின் மனைவி தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் கோவை மாவட்ட கண்காணிப்பாளர், போக்குவரத்து காவல்துறை தலைமை காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.