/tamil-ie/media/media_files/uploads/2022/07/tamil-indian-express-2022-07-26T105107.594.jpg)
சிதம்பரத்தில் பள்ளி சீருடையில் இருந்த மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவன் தாலி கட்டிய விவகாரத்தில், ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட பாலாஜி கணேஷ் என்பவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், 12 ஆம் வகுப்பு மாணவிக்கு, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர் பேருந்து நிலையத்திலே தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள்: தீபாவளி: 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. கட்டுப்பாடுகள் என்ன?
வைரலாகி வரும் அந்த வீடியோவில், சிதம்பரம் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே உள்ள பயணியர் நிழற்குடையில் சீருடையில் அரசு பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் வந்து அமர்கிறார். அப்போது அங்கு வந்த பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர், மாணவியின் அருகில் அமர்கிறார். பின்னர், மாணவியின் கழுத்தில் அந்த மாணவர் தாலியை கட்டுகிறார். அருகில் நின்ற மாணவியின் தோழிகள் அவர்களுக்கு பூக்கள் தூவி வாழ்த்துகளை தெரிவிக்கின்றனர். இப்படியாக பதிவான காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த சிதம்பரம் போலீசார் சம்பந்தப்பட்ட மாணவி மற்றும் மாணவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவர்களது பெற்றோரையும் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே இதுபற்றி அறிந்த கடலூர் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரம்யா தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில், இந்த வீடியோவை முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பாலாஜி கணேஷ் என்பவர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில் காவல்துறையினர் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். கைதான பாலாஜி கணேஷ் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.