சிதம்பரத்தில் பள்ளி சீருடையில் இருந்த மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவன் தாலி கட்டிய விவகாரத்தில், ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட பாலாஜி கணேஷ் என்பவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், 12 ஆம் வகுப்பு மாணவிக்கு, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர் பேருந்து நிலையத்திலே தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள்: தீபாவளி: 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. கட்டுப்பாடுகள் என்ன?
வைரலாகி வரும் அந்த வீடியோவில், சிதம்பரம்
இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த சிதம்பரம் போலீசார் சம்பந்தப்பட்ட மாணவி மற்றும் மாணவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவர்களது பெற்றோரையும் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே இதுபற்றி அறிந்த கடலூர்
இந்தநிலையில், இந்த வீடியோவை முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பாலாஜி கணேஷ் என்பவர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில் காவல்துறையினர் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். கைதான பாலாஜி கணேஷ் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil