/tamil-ie/media/media_files/uploads/2019/07/z1385.jpg)
இந்து அறநிலையத் துறைக்கு சொத்துக்கள் கிடையாது என பொன் மாணிக்கவேல் கூறினார்.
"நான் மட்டும் மீண்டும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அழிச்சு பொறுப்பில் வேலை பார்த்தால் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், ஏன் அமைச்சராக இருந்தாலும் உள்ளே வைத்து விடுவேன்" என முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
ஈரோடு சென்னி மலையில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், " ஹிந்து கோவில்கள் மூலம் 28 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. ஆனால் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு ரூபாய் 1000 கூட ஊதியமாக அரசு வழங்கவில்லை" என்றார்.
தொடர்ந்து, " ஹிந்து அறநிலையத்துறைக்கு ஒரு சொத்து கூட கிடையாது. இவையெல்லாம் வைணவ சைவ கோவில்களின் சொத்துக்கள். ஆனால் நான்கு லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளிட்ட ஏராளமான சொத்துக்கள் இருப்பதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் தவறான தகவலை கூறி வருகிறார்" என்றார்.
இதைத் தொடர்ந்து, " சிலை கடத்தல் பிரிவுக்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களை வேலையில் அமர்த்தக் கூடாது எனக் கேட்டுக் கொண்ட பொன் மாணிக்கவேல், தவறு செய்தால் அமைச்சராக இருந்தாலும் கைது செய்வேன்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.