Advertisment

மேகதாது அணை விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பை பதிவு செய்திருந்தால் பாராட்டி இருப்பேன்: பொன். இராதாகிருஷ்ணன்

மேகதாது அணை திட்டத்துக்கு எதிர்ப்பை பெங்களூரு கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பதிவு செய்திருந்தால் பாராட்டி இருப்பேன் என பொன். இராதாகிருஷ்ணன் கூறினார்.

author-image
WebDesk
New Update
Pon Radhakrishnan condemns Stalins visit to Bengaluru

நாகர்கோவிலில் பொன். இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்த போது எடுத்த படம்

முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவருமான பொன். இராதாகிருஷ்ணன் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

அப்போது, மு.க. ஸ்டாலினின் பெங்களூரு பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பட்டை அணிந்திருந்தார். இந்த நிலையில் அவர் பேசுகையில், “கருணாநிதி இந்திரா காந்தியுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து, காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற்றார்.

இதுதான் இன்றளவும் காவிரி நதி நீர் பங்கீட்டில் பிரச்னை ஏற்பட காரணம். எனினும் அக்காலக்கட்டத்தில் தஞ்சை விவசாயி ரங்கநாதன் வழக்கை திரும்ப பெறவில்லை.

இதனால் தான் வழக்கு இன்றளவும் உயிரோட்டமாக உள்ளது. பெங்களூரு முதல்வரோடு மு.க. ஸ்டாலின் திமுக தலைவராக கலந்துகொண்டால் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை.

ஆனால் அவர் தமிழ்நாட்டில் முதல்வராக கலந்துகொள்கிறார். அந்த வகையில், மேகதாது அணைக்கு தனது எதிர்ப்பை மு.க. ஸ்டாலின் பதிவு செய்திருந்தால் பாராட்டி இருப்பேன்” என்றார்.

செய்தியாளர் த.இ. தாகூர்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stalin Pon Radhakrishnan Nagercoil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment