/indian-express-tamil/media/media_files/b8tuzGxeKnWLX1kkVufW.jpg)
ரஜினிகாந்த்-ஐ நேரில் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புவனா ஒரு கேள்விக்குறி என்ற படத்தின் படப்பிடிப்புக்காக கிட்டத்தட்ட 42 ஆண்டுகளுக்கு பின்னர் சினிமா சூட்டிங்கில் கலந்துகொள்ள கன்னியாகுமரி வந்துள்ளார்.
இவர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி மாவட்டம் பணகுடியிலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் தொடக்கப் புள்ளியான ஆரல்வாய் மொழி பகுதிகளிலும் நடந்துவருகிறார்.
இவர் தற்போது கன்னியாகுமரி அன்னை நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கிறார். இது திருநெல்வேலி திமுக எம்.பி ஞான திரவியத்துக்கு சொந்தமான விடுதி ஆகும்.
இந்த நிலையில், ரஜினிகாந்த்தை காண ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை தினந்தோறும் காண முடிகிறது.
ரஜினிகாந்த்தும் காரில் சென்றாலும் கண்ணாடியை ஏற்றாமல் ரசிகர்களை பார்த்து கை அசைத்துவிட்டு செல்கிறார். இந்த நிலையில், ரஜினிகாந்த்தை முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்தத் தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வரவேற்றார்.
நாகர்கோவில் மாநகராட்சி பாஜக உறுப்பினரும், குமரி மாவட்ட பாஜக பொருளாளருமான முத்துராமனும் தங்கும் விடுதியில் ரஜினிக்கு பொன்னாடை அணிவித்து புகைப்படம் எடுத்து கொண்டார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.