/tamil-ie/media/media_files/uploads/2022/09/Pon-Radhakrishnan.jpg)
முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
ஆ. ராசாவின் பேச்சை திமுகவினரே கண்டிக்கின்றனர் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
இந்து மதத்தில் உள்ள தீண்டாமை குறித்து அண்மையில் ஆ. ராசா பேசியது சர்ச்சையானது. இதற்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளில் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்க தென்காசி அரசு மருத்துவமனைக்கு பொன். ராதாகிருஷ்ணன் வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்கள் அவரிடம் ஆ. ராசாவின் பேச்சு குறித்து கேள்வியெழுப்பினர். இதற்குப் பதிலளித்த பொன். ராதாகிருஷ்ணன், “அவர் பேசியது தவறு. அவ்வாறு ஆ. ராசா பேசியிருக்கக் கூடாது. இதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்றார்.
மேலும், “ஆ. ராசாவின் பேச்சை திமுகவினரே கண்டிக்கின்றன் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் பேசினார்.
இந்து மதத்தில் உள்ள தீண்டாமை குறித்து ஆ. ராசா பேசியது சர்ச்சையான நிலையில், அவருக்கு எதிராக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் புகார் அளித்துள்ளனர். மேலும் பாஜகவின் பட்டியலின அணியும் புகார் அளித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.