Advertisment

பொங்கல் பண்டிகை: ரேசன் கடைகளுக்கு வேட்டி, சேலைகளை ஜன.10-க்குள் அனுப்ப கைத்தறித்துறை உத்தரவு

பொங்கள் பண்டிகைக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதற்கு, ரேசன் கடைகளுக்கு வேட்டி, சேலைகளை ஜனவரி 10-ம் தேதிக்குள் அனுப்ப கைத்தறித்துறை உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
handloom

2.50 லட்சம் நெசவாளர்களிடம் இருந்து பெறப்பட்ட இலவச வேட்டி, சேலைகளை கிடங்கு மற்றும் ரேசன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொங்கள் பண்டிகைக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதற்கு, ரேசன் கடைகளுக்கு வேட்டி, சேலைகளை ஜனவரி 10-ம் தேதிக்குள் அனுப்ப கைத்தறித்துறை உத்தரவிட்டதையடுத்து, 2.50 லட்சம் நெசவாளர்களிடம் இருந்து பெறப்பட்ட இலவச வேட்டி, சேலைகளை கிடங்கு மற்றும் ரேசன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Advertisment

தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்குவதற்காகவும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்தநிலையில் 2025-ம் ஆண்டிற்காக 1 கோடியே77 லட்சத்து 64 ஆயிரத்து 476 சேலைகளும், 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரத்து 995 வேட்டிகளையும் உற்பத்தி செய்வதற்கான அனுமதியை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இலவச, வேட்டி சேலைகளை ஜனவரி 10-ம் தேதிக்குள் ரேசன் கடைகளுக்கு அனுப்ப கைத்தறித்துறை வியாழக்கிழமை அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து, 2.50 லட்சம் நெசவாளர்களிடம் இருந்து பெறப்பட்ட இலவச வேட்டி, சேலைகளை கிடங்கு மற்றும் ரேசன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisment
Advertisement

2025 பொங்கல் பண்டிகைக்கு 1.75 கோடி சேலைகளும், ஏறத்தாழ 1.77 கோடி வேட்டிகளும் வழங்கப்பட உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment