பொங்கல் பண்டிகைக்காக 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் சிறப்பு பேருந்துகளின் அறிவிப்பு தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் பண்டியை ஒட்டி வெளியூர்களுக்கு செல்வோர் வசதிக்காக 11,12,13,14 நான்கு நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அவர் கூறினார். இதில் சென்னையில் இருந்து 14263 பேருந்துகள் இயக்கப்படும் என்ற அவர், மொத்தமாக 24708 பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.
சிறப்பு பேருந்துகளில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய 9 ஆம் தேதி அன்று சிறப்பு மையங்கள் திறக்கப்படும் என்றும், பண்டிகை முடிந்து திரும்பி வருவோருக்காக பேருந்துகள் இயக்குவது குறித்து ஜனவரி 2 ஆம் தேதி ஆய்வு கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்த பேருந்துகள் மாதவரம், தாம்பரம் மெப்ஸ், கே.கே நகர் உள்ளிட்ட இடங்களில் இருந்தும், கோயம்பேட்டில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
IRCTC : சொந்த ஊருக்கு செல்ல பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Pongal special buses announced
திமுக அணி விறுவிறு கூட்டணி ஒப்பந்தம்: அதிமுக அணியில் நீடிக்கும் இழுபறி
தமிழகத்தில் மதுவிலக்கு இனி கனவுதானா? வாக்குறுதி தரக்கூட முன்வராத கட்சிகள்
அமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதி ஒதுக்கீடு – டிடிவி தினகரன் அறிவிப்பு
36 வயது… விவாகரத்து… ஆனாலும் மகிழ்ச்சி: திவ்யதர்ஷினி ‘டைமிங்’ வீடியோ
குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ 1000 நிதி : யார் திட்டத்தை யார் காப்பி அடித்தது?