TN Minister Ponmudi case : திமுக மூத்தத் தலைவரும் உயர் கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் உள்ளன.
இது தொடர்பான மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் இந்தப் புகாரை தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், இதற்கு எதிராக பொன்முடி கோரிக்கை விடுத்திருந்தார்.இந்தக் கோரிக்கையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று (செப்.14) நிராகரித்தார்.
மேலும் இந்த வழக்கு மீண்டும் அக்டோபர் 9ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்கக் கூடாது என பொன்முடி தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இதுமட்டுமின்றி தற்போதைய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மீதான வழக்குகளும் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“