/indian-express-tamil/media/media_files/2025/09/17/ponmudi-chennai-high-court-2025-09-17-06-51-24.jpg)
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி, இதுபோன்ற பேச்சை தவிர்த்து இருக்க வேண்டும். காவல் துறையினரும் முறையாக விசாரணை நடத்தி இருக்க வேண்டும். குறைந்தபட்சம் புகார் அளித்தவர்களிடம் விசாரணை நடத்தி இருக்க வேண்டும் என்று நீதிபதி தனது கருத்தை பதிவு செய்தார்.
சைவம் மற்றும் வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை முடித்து வைத்தது.
தி.மு.க முன்னாள் அமைச்சா் க.பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, சைவம், வைணவம் குறித்தும் பெண்கள் குறித்தும் பேசிய கருத்துகள் சா்ச்சையானது. இதையடுத்து பொன்முடிக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தாா். இந்த வழக்கு விசாரணையின்போது பொன்முடி பேச்சு தொடா்பான விடியோ உள்ளிட்ட ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞா் பி.எஸ்.ராமன், முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாா்கள் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு, ஆதாரங்கள் இல்லாததால் அவை முடித்து வைக்கப்பட்டன. புகார்கள் முடித்து வைக்கப்பட்டதற்கு எதிராக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் தாரர்கள் மனு தாக்கல் செய்யலாம் அல்லது தனிநபர் புகார் தாக்கல் செய்யலாம் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
இதற்கு புகார்தாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக புகார் அளித்தவர்களிடம் விசாரணை நடத்தாமல் புகார்கள் முடித்து வைக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தனிநபர் புகார் தாக்கல் செய்யப்பட்டு, அந்த வழக்கு எம்.பி - எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் புகார்தாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பொறுப்பான பதவியில் இருந்த பொன்முடி, இதுபோன்ற பேச்சை தவிர்த்து இருக்க வேண்டும். காவல் துறையினரும் முறையாக விசாரணை நடத்தி இருக்க வேண்டும். குறைந்தபட்சம் புகார் அளித்தவர்களிடம் விசாரணை நடத்தி இருக்க வேண்டும் என்று நீதிபதி தனது கருத்தை பதிவு செய்தார்.
மேலும், புகார்கள் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து புகார்தாரர்கள் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக தனி நபர் புகார்கள் தாக்கல் செய்யலாம் என்றும் அனுமதி அளித்த நீதிபதி, உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.