திருவெறும்பூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், நாளை மறுநாள் (மே 31) காலை 9:45 மணி முதல் மாலை 6:00 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், போலீஸ் காலனி, காவேரி நகர், சிலோன் காலனி, அண்ணாநகர், பிள்ளையார் கோயில் தெரு, அய்யனார் தெரு, டி.என்.யூ.பி.டி (TNUPD), எம்.ஜி.ஆர் நகர், கும்பக்குடி, கும்பக்குடி சிட்கோ (SIDCO), பட்டவெளி, சுருளி கோயில், நொச்சி வயலூர், மாணிக்கம் நகர், நாவல் பட்டு ரோடு, பாரதிபுரம், டி. நகர் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது.
இதேபோல், வி.ஓ.சி நகர், சவுத் இந்திரா நகர், ஆனந்தம் நகர், தளபதி நகர், கக்கன்காலனி, அம்பேத்கர் நகர், தென்றல் நகர், சோழமாதேவி நகர், செல்வகணபதி நகர், வேலன் நகர், காந்தி நகர், ஐ.ஏ.எஸ் நகர், சோழபுரம், புதுத்தெரு, நேதாஜி நகர், ஆர்.எஸ்.கே நகர் ஆகிய பகுதிகளிலும் நாளை மறுநாள் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை மேற்கொள்ளப்படுவதால், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.