பராமரிப்பு பணிகள்: திருவெறும்பூர் துணை மின் நிலைய பகுதிகளில் மே 31ஆம் தேதி மின்தடை

பராமரிப்பு பணிகள் காரணமாக திருவெறும்பூர் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மறுநாள் (மே 31) மின் விநியோகம் தடை செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மக்கள் தங்கள் பணிகளை திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பராமரிப்பு பணிகள் காரணமாக திருவெறும்பூர் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மறுநாள் (மே 31) மின் விநியோகம் தடை செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மக்கள் தங்கள் பணிகளை திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Power cut in Trichy saturday april 19 Tamil News

திருவெறும்பூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், நாளை மறுநாள் (மே 31) காலை 9:45 மணி முதல் மாலை 6:00 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Advertisment

அந்த வகையில், போலீஸ் காலனி, காவேரி நகர், சிலோன் காலனி, அண்ணாநகர், பிள்ளையார் கோயில் தெரு, அய்யனார் தெரு, டி.என்.யூ.பி.டி (TNUPD), எம்.ஜி.ஆர் நகர், கும்பக்குடி, கும்பக்குடி சிட்கோ (SIDCO), பட்டவெளி, சுருளி கோயில், நொச்சி வயலூர், மாணிக்கம் நகர், நாவல் பட்டு ரோடு, பாரதிபுரம், டி. நகர் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது.

இதேபோல், வி.ஓ.சி நகர், சவுத் இந்திரா நகர், ஆனந்தம் நகர், தளபதி நகர், கக்கன்காலனி, அம்பேத்கர் நகர், தென்றல் நகர், சோழமாதேவி நகர், செல்வகணபதி நகர், வேலன் நகர், காந்தி நகர், ஐ.ஏ.எஸ் நகர், சோழபுரம், புதுத்தெரு, நேதாஜி நகர், ஆர்.எஸ்.கே நகர் ஆகிய பகுதிகளிலும் நாளை மறுநாள் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை மேற்கொள்ளப்படுவதால், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: