நெல் கொள்முதல் முறைகேடு தடுத்து நிறுத்தம்: விவசாயிகளுக்கு 600 கோடி வங்கிகளில் செலுத்தப்பட்டது- பிஆர்.பாண்டியன்

நெல் கொள்முதல் முறைகேடு தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் விவசாயிகளுக்கு 600 கோடி வங்கிகளில் செலுத்தப்பட்டதாகவும் பிஆர்.பாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

நெல் கொள்முதல் முறைகேடு தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் விவசாயிகளுக்கு 600 கோடி வங்கிகளில் செலுத்தப்பட்டதாகவும் பிஆர்.பாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

author-image
WebDesk
New Update
PR Pandian

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழகத்தில் 50 ஆண்டு காலமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. 

Advertisment

இந்நிலையில், திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தனியாருக்கு தாரை வார்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. நடப்பாண்டு ஒட்டுமொத்தமாக தேசிய நுகர்வோர் கூட்டமைப்போடு (NCCF) ஒப்பந்தம் செய்தது. இந்நிறுவனத்தோடு தமிழக அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு என்கிற தனியார் நிறுவனம் தமிழக அரசின் நிர்பந்தத்தால் இடைத்தரகர் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. 

இதன் அடிப்படையில் தமிழகம் முழுமையிலும் நெல் கொள்முதல் செய்வவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து காவிரி டெல்டா மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் என்று அரசு தான் தோன்றித்தனமாக அறிவித்தது. 

குறிப்பாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல்லுக்கு 48 மணி நேரத்துக்குள்ளாக தனது சொந்த நிதியிலிருந்து விடுவிக்க வேண்டும். கொள்முதல் செய்யப்படும் நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசியை சம்பந்தப்பட்ட நிறுவனம் உடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப களத்தின் இருப்பில் வைக்கப்பட வேண்டும்.

Advertisment
Advertisements

இருப்பு வைக்கப்படும் அரிசிக்கான தொகையை மட்டும் நுகர்பொருள் வாணிபக் கழகம் அந்நிறுவனத்திற்கு வழங்கும் என ஒப்பந்தம் செய்துள்ளனர். மேற்கண்ட அடிப்படையில் ஒப்பந்த செய்வதற்கு தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பிற்கு பணப்பரிமாற்ற தகுதியோ, கொள்முதல் கட்டமைப்புகளோ கிடையாது. 
தனியார் நிறுவனத்திற்கு  முன்பணம் கொடுத்து கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஏற்காத உயர் அதிகாரிகள் பணி மாறுதல் செய்யப்பட்டார்கள்.

இதனை மீறிய அதிகார செல்வாக்கால் ஒப்பந்தம் பெற்ற தனியார் நிறுவனம் தன் விருப்பத்திற்கு நெல்லை கொள்முதல் செய்து அரிசி மற்றும் கொள்முதல் குறித்த கணக்கு வழக்குகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு வழங்காமல் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டனர். 

இதனை அறிந்த நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் சண்முகசுந்தரம் இஆப தனியார் கொள்முதல் செய்வதற்கு தற்காலிக தடை விதித்தார். இந்நிலையில் விவசாயிகளுக்கு கொள்முதல் செய்த நெல்லுக்கு 2 மாத காலமாக பணம் வழங்கப்படவில்லை. சிலருக்கு கொள்முதல் செய்ததற்கான ரசீதும் வழங்கப்படவில்லை.

பல இடங்களில் கொள்முதல் செய்யாமல் கொட்டி வைக்கப்பட்டு மழையில் நணைந்து கிடக்கிறது. இந்நிலையில் தனியாருக்கு கொள்முதல் அனுமதி ரத்து செய்யப்பட்டதால் விவசாயிகள் பெரும் துன்பத்திற்கு தள்ளப்பட்டனர். இதனை அறிந்த தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கடந்த 27ஆம் தேதி முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தோம்.

அதனை தொடர்ந்து தமிழக அரசின் உணவுத்துறை செயலாளர் சத்யபிரதாசாகு, இஆப , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினுடைய மேலாண்மை இயக்குனர் சண்முகசுந்தரம் இஆப ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தனர். 

அதனை ஏற்று கடந்த 26 ஆம் தேதி பேச்சு வார்த்தை நடைபெற்றது, அதில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் உடனடியாக அரிசியை கைப்பற்றுவது, கொள்முதல் நிலையங்களில் இருப்பிலுள்ள நெல் குறித்த கணக்கெடுப்புகள் நடத்தி உடனடியாக தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது, விவசாயிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய தொகை முழுமையும் பத்து தினங்களுக்குள் தமிழக அரசே பொறுப்பேற்று வழங்குவது உட்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.

இதனை கூட்ட பதிவு அறிக்கையாக தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் இனி ஒப்பந்தம் பெற்றுள்ள தேசிய நுகர்வோர் கூட்டமைப்புக்கும் அதன் மூலம் இடைத்தரகு ஒப்பந்தம் பெற்ற தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்புக்கும் கொள்முதல் அனுமதியை ரத்து செய்து தொடர்ந்து அவர்களை கொள்முதலில் அனுமதிப்பதில்லை என முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால் உணவு அமைச்சர் தலையீட்டில், ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனத்தை பாதுகாப்பதற்காக 
டிஎன்சிஎஸ்சி மேலாண்மை இயக்குனர் சண்முகசுந்தரம் ஐஏஎஸ்யை கடந்த 27 ஆம் தேதி முதல்
20 நாட்கள் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டார். 

இதனை அறிந்து அமைச்சருக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை நேற்று மதுரையில் அறிவித்தோம். இதனையடுத்து தமிழ்நாடு அரசு அவசர நடவடிக்கை எடுத்து நேற்று 29ம் தேதி நள்ளிரவு முதல் விவசாயிகளுக்கு  நிலுவையில் இருந்த 600 கோடி ரூபாயும் விடிவித்து விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மற்றும் குடோன்களில் பதுக்கப்பட்ட அரிசிகளை கண்டறிந்து உடனடியாக கைப்பற்றியது. தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொள்முதல் நடவடிக்கைகள் கொண்டுவரப்பட்டது. 

இதன் மூலம்  தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு போராட்டம் முழு வெற்றி பெற்று இருக்கிறது. தொடர்ந்து தமிழ்நாட்டில் தனியாரை கொள்முதலில் அனுமதிப்பதை தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

எங்கள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த தமிழக அரசின் உணவுத்துறை அதிகாரிகளுக்கு  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதற்காக எங்களோடு துணைபுரிந்த ஊடகம், பத்திரிகை ஆசிரியர்களுக்கும், செய்தியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

க. சண்முகவடிவேல்

PR Pandian

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: