New Update
![sasa](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/lhPk3M23jSYMV2zV7c92.jpg)
00:00
/ 00:00
நார்வே செஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் “ நார்வே செஸ் தொடரில் முற்றிலும் வியத்தகு ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் இளம் வீரர் பிரக்ஞானந்தா.
மூன்றாம் சுற்றில் உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான மேக்னஸ் கார்லசனை வென்றதோடு, தற்போது ஐந்தாம் சுற்றில் உலகின் முன்றாம் நிலை ஆட்டக்காரரான பேபியானோ கருவானாவையும், கிளாசிக்கல் செஸ் வகைப் போட்டியில் வீத்தியிருப்பதுதென்பது மிகப்பெரும் சாதனையாகும்.
டாப் 10 வரிசையில் நிழைந்திருக்கும் உங்கள் வரவு நல்வரவாகட்டும் பிரக்ஞானந்தா. ஒட்டுமொத்த செஸ் உலகமும் உங்களின் திறனையும் சாமர்த்தியத்தையும் கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.