ராகுல் - பிரியங்கா காந்தி குறித்து அவதூறு கருத்து: பா.ஜ.க மாநில நிர்வாகி கைது

பா.ஜ.க மாநில நிர்வாகி பிரவின்ராஜ் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் குறித்து சர்சைக்குரிய வகையில் எக்ஸ் சமூக வலை தளத்தில் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது.

பா.ஜ.க மாநில நிர்வாகி பிரவின்ராஜ் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் குறித்து சர்சைக்குரிய வகையில் எக்ஸ் சமூக வலை தளத்தில் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Pravinraj  BJP

கரூர் காங்கிரஸ் கமிட்டியினர் அளித்த புகாரின் பேரில், மாவட்ட சைபர் கிரைம் அதிகாரிகள் பிரவின்ராஜை கைது செய்தனர்.

Tamilnadu-bjp: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முத்துகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரவின்ராஜ். இவர் பா.ஜ.க-வின் மாநில ஊடகப்பிரிவு பெறுப்பாளராக உள்ளார். இவர் சமூக ஊடகங்களில் தி.மு.க., காங்கிரசுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்து பரப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் குறித்து சர்சைக்குரிய வகையில் எக்ஸ் சமூக வலை தளத்தில் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. 

Advertisment

இது குறித்து காங்கிரஸ் கட்சியினர் கரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று காலையில் நாமக்கல்லுக்கு வந்து பிரவின்ராஜை கைது செய்து கரூருக்கு அழைத்துச் சென்றனர்.

பிரவின்ராஜ் எக்ஸ் சமூக வலை தளத்தில் "சங்கி பிரின்ஸ்" என்ற பெயரில் பதிவிட்டு வருகிறார். ஆகஸ்ட் 10 ஆம் தேதி, அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியின் வீடியோவை வெளியிட்டார் மற்றும் இருவரையும் பற்றி தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்தார். ராகுல் காந்தியை நேர்மையற்ற அரசியல்வாதி என்று கூறியுள்ளார். 

கரூர் காங்கிரஸ் கமிட்டியினர் அளித்த புகாரின் பேரில், மாவட்ட சைபர் கிரைம் அதிகாரிகள் பிரவின்ராஜை கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்ட பிறகு, பிரவின்ராஜ் கைது செய்யப்பட்ட போது போலீசார் தனது வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதாகவும், அடையாள அட்டை விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள மறுத்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, பிரவின்ராஜூக்கு கண்டனம் தெரிவித்ததோடு, தனது கட்சித் தலைவர்களுக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல்களை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார். பா.ஜ.க பிரமுகரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் நாமக்கல் மாவட்ட பா .ஜ.க.வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamilnadu Bjp

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: