எலி காய்ச்சல் பாதிப்பால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு? கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை தீவிரம்
பொள்ளாச்சி அருகே கர்ப்பிணி பெண் ஒருவர் எலி காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் கிராம மக்களுக்கு சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள பணிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வனிதா, 5 மாத கர்ப்பிணி. இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக காய்ச்சல் இருந்துள்ளது. பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Advertisment
வனிதாவுக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் எலி காய்ச்சல் இருப்பது என தகவல் தெரியவந்தது.
இதையடுத்து, வனிதாவிற்கு நேற்று இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவர்கள் வனிதாவுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் வனிதா உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவர் வசித்து வந்த பணிக்கம்பட்டியில் சுகாதாரத் துறையினர் பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தும் கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டும் வருகிறது.
மேலும் சுகாதாரத் துறை கட்டுப்பாட்டில் கிராமம் கொண்டு வரப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண் எலி காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தார் என்ற தகவல் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.