Advertisment

காவிரி விவகாரத்தில் நடிகர் சங்கம் குரல் கொடுக்காதது ஏன்? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

காவிரி பிரச்னையில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் குரல் கொடுக்காதது ஏன் என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார். கர்நாடகாவில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Premalatha vijayakanth

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். (File Photo)

Cauvery issue: தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காவிரி விவகாரத்தில் நடிகர் சங்கம் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்காதது ஏன் என கேள்வியெழுப்பினார்.

இது குறித்து அவர் பேசுகையில், “நடிகர் சங்கத்தில் கேப்டன் விஜயகாந்த் சங்கத்தின் தலைவராக இருந்தபோது இதுபோன்ற எத்தனையோ பிரச்னைகளுக்கு குரல் கொடுத்துள்ளார்.

Advertisment

ஆனால் தற்போதுதவரை காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் நடிகர் சங்கம் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கவில்லை” என்றார். தொடர்ந்து, “கர்நாடகத்தில் அங்குள்ள நடிகர்கள் கன்னட விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று ஒருநாள் போராட்டத்தில் கலந்துகொண்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதையடுத்து அவரிடம் தேர்தல் கூட்டணி தொடர்பாக கேள்வியெழுப்பினார்கள். அதற்குப் பதிலளித்த பிரேமலதா, “தேர்தல் நேரத்தில் அது குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்” என்றார்.

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் பெங்களூருவில் போராட்டம் நடத்திவருகின்றன. இந்தப் போராட்டத்துக்கு கன்னட நடிகர்கள் ஷிவ் ராஜ்குமார் தலைமையில் இன்று ஆதரவு தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Cauvery Issue
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment