/tamil-ie/media/media_files/uploads/2022/04/premalata.jpg)
Tamil News updates
``2 ஆடு, 2 பெட்டி 2 மாடு வைத்திருக்கும் அண்ணாமலைக்கு எதற்கு 'ஒய்'பிரிவு பாதுகாப்பு?” என தேமுதிக மாநிலப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.
பெட்ரோல் - டீசல் மற்றும் சிலிண்டர் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும் விருதுநகர் எம்ஜிஆர் சிலை அருகே விருதுநகர் மாவட்ட தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கி நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை அல்லது தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். தற்போது கலாசார சீரழிவு நடைபெற்று வருகிறது.
'திராணியிருந்தால் கைது செய்து பாருங்கள்' என பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னதற்கு நடவடிக்கை எதுவும் எடுக்காததிலிருந்தே அண்ணாமலை சொன்னது உண்மைதான் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
இத்தனை ஆண்டுகளில் மயிலாப்பூர் கடலாக மாறும் அபாயம்: சௌமியா அன்புமணி எச்சரிக்கை
மக்கள் வரிப்பணத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ரெண்டு ஆடு, ரெண்டு பெட்டி, ரெண்டு மாடு வைத்திருப்பவருக்கு எதற்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு. தைரியமிருந்தால் அந்த பாதுகாப்பு வேண்டாமென மத்திய அரசுக்கு அவர் கடிதம் எழுதட்டுமே என்று பேசினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.