/indian-express-tamil/media/media_files/JzpoToQooeZE3cbssHyB.jpg)
சந்தனப் பேழையில் விஜயகாந்த் உடல்
vijayakanth | premalatha-vijayakanth | கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 71. உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த், கொரோனா பெருந் தொற்று மற்றும் நுரையீரல் பிரச்சனை காரணமாக நேற்று காலமானார்.
அவரது பூத உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னையில் உள்ள தீவுத்திடலில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு இன்று மதியம் ஒரு மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து அவரது உடல் சென்னை தீவு திடலில் இருந்து கோயம்பேடு தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது அவருடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பின் தொடர்ந்து வந்தனர்.
தொடர்ந்து கோயம்பேடு கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக தமிழ்நாடு அரசு சார்பில் முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. 72 குண்டுகள் முழங்க போலீசார் மரியாதை வழங்கினார்கள். விஜயகாந்தின் கைகளை பற்றி பிரேமலதா பிரியாவிடை அளித்தார்.
பின்னர் பேட்டியளித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், " கேப்டன் விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் சுமார் 15 லட்சம் பேர் கலந்துள்ளனர். அனைவருக்கும் நன்றிகள்.
இந்த நேரத்தில் காவல் துறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விஜயகாந்த் கைகளில் அணிந்து இருந்த மோதிரத்தோடு அவரை அடக்கம் செய்துள்ளோம். கேப்டனின் கனவை நிச்சயம் வெற்றி பெற செய்வோம்" என்றார்.
திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக மிகப்பெரிய அளவில் உருவாகி 10% வாக்குகளை நெருங்கியவர் கேப்டன் விஜயகாந்த். கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, அதிமுக தேமுதிக கூட்டணி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. அந்தத் தேர்தலில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. கேப்டன் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது நினைவு கூற தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.