/tamil-ie/media/media_files/uploads/2023/05/Express-Image-18.jpg)
கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பேசிய அவர், சென்னை கிண்டியில் கட்டப்பட்டு இருக்கும் பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு வருகை தர அழைப்பு விடுத்தார்.
திமுக முன்னாள் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் பெயரில் கட்டப்பட்டிருக்கும் மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் முர்முவும் சம்மதம் தெரிவித்தார்.
இந்த சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வருகின்ற ஜூன் மாதம் 15ஆம் தேதி சென்னைக்கு வருகைதர உள்ளார்.
இந்த மருத்துவமனை திறப்பு விழாவுக்காக சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரமாண்ட விழா ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்விலும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.